Saturday, September 15, 2012

போலிகள் தயாரிப்பின் உச்சம்: மனித “மலம்” கலந்து தயாராகும் சிகரெட்டுகள்







முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட சகலத்தையும் பிரதி எடுத்ததுபோல போலி தயாரிப்புகளை உற்பத்தி செய்வது சீனாவுக்கு கைவந்த கலை ஆகும்.
இந்நிலையில் பிரிட்டன் மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்களில் மனித மலம், இறந்த பூச்சிகள், புழுதி மண் போன்றவை கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் சோதனையில் தெரியவந்துள்ளது.
இதுபோல தரக்குறைவான, ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் போலி சிகரெட்கள் சீனாவில் தயாராகி முறைகேடான வகையில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமானது.
பிரிட்டனில் போலி சிகரெட் புழக்கம் பற்றி அறிய பர்மிங்காம் நகரில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ். இன்டலிஜென்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது.
இதில் 30.9 சதவீத சிகரெட்கள் போலி மற்றும் வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக எடுத்து வரப்படுகின்றன என்று தெரியவந்தது.
கடந்த ஆண்டில் இது 14.1 சதவீதம் மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் இரட்டிப்பாக உயர்ந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தீவிர சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் மே வரை 13 ஆயிரம் போலி சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை சீனாவில் தயாராகி முறைகேடான வகையில், பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டவை ஆகும்.
அச்சு அசலாக ஒரிஜினல் சிகரெட் பாக்கெட் போலவே மிக நேர்த்தியாக இந்த போலி பாக்கெட்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பல ஆண்டுகள் புகைப்பவர்களால்கூட வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவை இருந்தன.
இதற்கிடையில், டெர்பிஷயர் உட்பட சில இடங்களில் கைப்பற்றப்பட்ட போலி, வெளிநாட்டு சிகரெட்களை எல்லை பாதுகாப்பு மற்றும் குடியேற்ற துறையான பார்டர் ஏஜென்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் ரசாயன பொருள், புழுதி மண், மனித மலம், இறந்த பூச்சிகள் போன்ற கழிவுகள் அந்த சிகரெட்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பொது இடத்தில் அள்ளிய குப்பையை புகையிலையுடன் கலந்து சிகரெட்களை உருவாக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. சீனா உள்ளிட்ட கிழக்கு நாடுகளில் இருந்து போலி சிகரெட்கள் அதிகளவில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
இது போன்ற போலி சிகரெட்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல்நலத்தை கெடுக்கும். உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று சுகாதார துறை அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
தரக்குறைவான வெளிநாட்டு சிகரெட், போலி சிகரெட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுகிறதா என்று கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
                                    நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
    சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் இருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு ‘சமூக விரோதி’ புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.
    இறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?
    இஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல  நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.
    நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)
    இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள்.  (அல்குர்ஆன் 2:195)
    உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)
    மேலே கண்ட இறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா?
     மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.
    புகைப்பிடிப்பவர்களிடம் அதன் தீமைகளை எடுத்துரைத்து அப்பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டினால் சாதாரணமாக அவர்கள் கூறுவது “புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியாமலில்லை; உடல் பாதிக்கப்படுவது உணராமலுமில்லை; ஆனால் பாழாய்ப்போன வழக்கத்தை விட முடியவில்லையே” என்பதுதான். புகைப்பிடிக்கும் அறிஞர்களும் கூட இதையே கூறுவது அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் அழகல்ல

1 comment: