Friday, March 23, 2012

குழந்தைகளையும் பாதிக்கும் பு(ப)கை பழக்கம்!

நியூயார்க்: குழந்தைகளுக்கு கூட ரத்த புற்று நோய் ஏற்படுகிறது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நல மையம் ஆய்வு மேற்கொண்டது.

அதில் குழந்தை கருவில் இருக்கும்போது பெற்றோர் அதாவது தாயோ, தந்தையோ அதிக அளவில் சிகரெட் பிடிப்பதால் ரத்து புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்திய கூறு உருவாகிறது.

பொதுவாக பெண்களை விட ஆண்கள்தான் சிகரெட் புகைக்கின்றனர். மனைவிக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 15 சிகரெட்டுக்கு மேல் பிடித்தால் ரத்த புற்று நோய் தாக்கக்கூடிய ஆபத்து ஏற்படும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பீடி, சிகரெட் வாங்க குழந்தைகளை கடைகளுக்கு அனுப்புவதால் அவர்களுக்கும் சிறுவயதிலேயே புகை பிடிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment