குர்ஆனின் நற்போதனைகள்
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே
(மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா?
நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? 2:44
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக்
கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர்
கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும்
நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 2:269
அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க
வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான
முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். 4:82
(நபியே!) நீர் கூறும்;
“என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம்
கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக
இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக)
அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும்
நீர் கூறும்; “குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க
வேண்டாமா?” 6:50
உங்கள் அனைவரையும் ஒரே
ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து (பின்னர்
கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய
மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். 6:98
அவன் எத்தகையவன் என்றால் அவனே
பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்;
இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை
உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில்
சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 13:3
நிச்சயமாக அல்லாஹ் நீதி
செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு
(உங்களை) ஏவுகிறான்; அன்றியும் மானக்கேடான காரியங்கள் பாவங்கள்
அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் –
நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம்
செய்கிறான். 16:90
அவர்கள் தங்களுக்குள்ளே (இத
பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும்
இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும் உண்மையையும் குறிப்பட்ட தவணையையும்
கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர்
தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள். 30:8
அச்சமும் ஆசையும் ஏற்படும்படி
அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச்
செய்து அதைக் கொண்டு பூமியை – அது (வரண்டு) இறந்த பின்னர்
உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன நிச்சயமாக அதில்
சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.30:24
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ்
வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும்
பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் அல்லாஹ்வை அன்றி (வேறு)
படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க
(இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். 35:3
அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும்
போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது
மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்;
மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான்
– சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள்
இருக்கின்றன. 39:42
அவர்கள் கூறுவார்கள்; “நாங்கள்
(அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால்
நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”
No comments:
Post a Comment